தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஆணையரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இடம்: கிண்டி
பள்ளிகள் விடும் நேரத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் ஆசிரியர் ரோட்டில் நின்று வாகனங்களை நிறுத்தி மாணவர்கள் ரோட்டை கடக்கின்றனர்.உடுமலை குட்டை திடல் பஸ் ஸ்டாப் அருகில்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சார்பில் பத்தாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஊராட்சி செயலர் சங்கம் சார்பில் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை காயிதே மில்லத் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது கோரிக்கை மனுக்களை மாணவிகளுக்கு வழங்கினர்.