விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மொடையூர் கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற சுகந்தி வீட்டுமனை பட்டா வழங்க கோரி தனது குழந்தைகள் மற்றும் கணவர் உடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பணி நிரந்தரம் மற்றும்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கௌரவவிரிவுரையாளர்கள் காலவரையறையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு செய்முறை தேர்வுகள் தமிழகம் முழுவதும் துவங்கியுள்ளது. திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் மனையியல் செய்முறை தேர்வுக்காக, சத்தான உணவுகளை செய்து அசத்திய மாணவிகள்.
டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.