சென்னை வர்த்தக மையத்தில் நடந்த எல்சினா மாநாட்டில் மின்னணு தொழில்துறையின் நிலை மற்றும் வளர்ச்சி என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்ட தொழில்துறை அமைச்சர் ராஜா.இடம் : நந்தம்பாக்கம்
டைகான் அமைப்பு விருது வழங்கும் விழாவில் கல்வி மற்றும் தொழில்முனைவு பிரிவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற விஐடி பல்கலை வேந்தர் விசுவநாதன். இடம்: சென்னை.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது. ஓம் நமோ நாராயணா கோஷம் விண்ணதிர பிரகாரத்தை வலம் வந்து தரிசித்தனர். கொடிமரத்தில் மலர் தூவி வழிப்பட்டனர்.
கோவை சின்னவேடம்பட்டி கவுரவ மடாலயத்தில் உள்ள ராமானந்த உயர்நிலைப்பள்ளி மற்றும் டிகேஎஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில், செய்தித்தாள் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு சாதனை நிகழ்ச்சி நடந்தது.
பந்தலூர் பகுதியில் கோடை காலத்தில் மட்டுமே பூத்து குலுங்கும், பிளேம் ஆப் பாரஸ்ட் மலர்களை இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.