தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல திருவிழாவில் பங்கேற்பவர்கள் வீட்டுக்கு செல்லும்போது இனிப்பின் அடையாளமாக கரும்பு கட்டுகளை வாங்கி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருவிழாவில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள கரும்புகள்..
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற புகார்கள் குறித்து மாவட்ட காவல் பார்வையாளர் நேரில் அஜய் லிண்டா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா பேசினார் . அருகில் அமைச்சர் கணேசன்.
காரைக்கால் நெடுங்காடு தொகுதி என்.ஆர்.காங்.கட்சி வேட்பாளர் சந்திரபிரியங்காவை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பூவம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
படம்:காளீஸ்வரன்,செய்திஇல்லைசென்னையில் தொடர்ந்து வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று சட்டென மாறிய வானிலையால் சிறிது நேரம் கொட்டித் தீர்த்த கன மழை.இடம் : அடையாறு
ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வீரப்பன் சத்திரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஒரு வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.