சென்னை காயிதே மில்லத் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது கோரிக்கை மனுக்களை மாணவிகளுக்கு வழங்கினர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சார்பில் பத்தாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஊராட்சி செயலர் சங்கம் சார்பில் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தே.மு.தி.க அலுவலகத்திற்கு விருப்ப மனு வாங்க வந்த அக்கட்சியினர் சாலையிலேயே வாகனங்களை விட்டுச் சென்றதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம்: கோயம்பேடு .