காஞ்சிபுரம் திருக்காலிமேடு அருந்ததியர் நகர் 2வது தெருவில் கழிவுநீர் கால்வாய் மண் திட்டுகளால் தூர்ந்து இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மண் திட்டுகளால் தூர்ந்த கால்வாயை தூர்வாரி சீரமைத்தனர்.
மத்திய அரசு புதிய யு.ஜி.சி. விதிகளை அமல்படுத்த வலியுறுத்தி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு (எஃப்.எஸ். ஓ. டி.என்.) அமைப்பு சார்பில் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் பேரணையாகச் சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு மழை பெய்துள்ளது அதன் எதிரொலியால் முந்திரி விளைச்சலில் பூ பூத்து குலுங்குகிறது. இடம் : குள்ளஞ்சாவடி சாமுட்டி குப்பம்.
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் தங்கள் சேலையால் வாய்களை மூடிக்கொண்டனர்.