உடுமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
ஊட்டி என். சி. எம்.எஸ்., வளாகத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வணிக வளாகம் , திறந்து வாடகை விடாமல் உள்ளதால் , கூட்டுறவு சங்கத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அடையாறு ஆறு கடலில் கடக்கும் இடத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களுக்கு நடுவே இரை தேடும் நெடுங்கால் உள்ளான் பறவைகள்.இடம் : சீனிவாசபுரம்
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் வைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வைத்த பிளக்ஸ் பேனர்களை, அகற்ற வந்த அதிகாரிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.