மதுரையில் தி.மு.க.,வின் ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்க தேனியில் இருந்து கட்சியினரை அழைத்து சென்ற அரசு பஸ்களில் தி.மு.க., கொடி கட்டப்பட்டிருந்தது.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதாட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உலக தமிழ் காப்பக கூட்டியக்கம் சார்பில் எழும்பூர் பகுதியில் பேரணி சென்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழும்பூர் பகுதியில் பேரணி சென்றனர்.
தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மெயின் அருவியில் காத்திருந்து குளித்து செல்லும் சுற்றுலா பயணியர்.
பூந்தமல்லி முதல் கலங்கரைவிளக்கம் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரை பணிகள் முடிவடைந்ததையடுத்து பூந்தமல்லி அருகே முல்லைத்தோட்டம் நிறுத்தத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் வரும் பணிகளை மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.