ஹிமாச்சல பிரதேசத்தின் மலைகளின் வாரணாசி என்றழைக்கப்படும் மண்டி நகரில் 7 நாட்கள் நடக்கும் மகா சிவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சர்வதேச கலாசார ஊர்வலம் நடந்தது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைக்குழுவினர் பங்கேற்றனர்.
தினமலர் நாளிதழ் மற்றும் தாமஸ் குக் டிராவல் ஏஜென்சி சார்பில் கிராண்ட் டிராவல் மேளாவில் சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்தோருக்கு தாமஸ் குக் டிராவல் ஏஜென்சி கோவை கிளை மேலாளர் உத்ரா மதன் பயண அனுமதிக்கான பேக்கேஜை வழங்கினார். இடம்: கோவை அவினாசி ரோடு கிராண்ட் ரீஜென்ட் ஓட்டல்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த முன்னூர் கிராமத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேத்தில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த முன்னூர் கிராமத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி பா.ஜ., சார்பில், தெருமுனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.இடம்: சிந்தாதரிப்பேட்டை