திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் கிராமத்தில் சாலையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால் சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் வியாசபுரம் ஊராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.