புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் அனைவரும் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி சகஸ்ரநாம பூஜையில் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
2 தேர்வு பொது தேர்வு துவங்க உள்ளதை யொட்டி வகுப்பறையில் தேர்வு எண் எழுதும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இடம்: அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்.
கோவை மாவட்டம் காரமடை அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருமண கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் கோவை மாவட்ட ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் கோவை வ.உ. சி.மைதானத்தில் நடந்தது.