மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மஹாராஷ்டிராவின் நவி மும்பையின் நெரூல் பகுதியில் அடுப்புக்கரியை தரம் பிரித்து எடுத்து வைத்த தொழிலாளி.
மலப்புரத்திலிருந்து கேரள அரசு பஸ்சில் கடத்தப்பட்ட ரூ.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை செல்வபுரத்தை சேர்ந்த நாகராஜை கேரளா போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டு சாதனைகளை விளக்கும் குறும்படம் அடங்கி எல்.இ.டி. திரையில் திரையிடுவதை சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேரில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இடம்: எழும்பூர், சென்னை