சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. இடம்: பழைய பேருந்து நிலையம், திருநெல்வேலி..
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூர் குமரன் ரோட்டில், காரில் கொண்டு செல்லப்பட்ட 6.5 லட்சம் ரூபாய் பணத்தை தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகில் டூவீலரில் கொண்டு செல்லப்பட்ட 35 லட்சம் ரூபாய் பணத்தை வடக்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து தொடர்ந்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் அரசு பள்ளி சுவரில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினார்.