கடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் சாலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு 100 மீட்டர் தூரத்திற்கு இடைவெளி குறிக்கும் வகையில் பெயிண்ட் அடித்து கோடு போடப்பட்டது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..