மஹாராஷ்டிரா மாநிலத்தில் குடி பாட்வா என்ற பெயரில் மராத்தி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடந்த விழாவில் மும்பையில் பாரம்பரிய நவ்வாரி புடவை மற்றும் ஆபரணங்கள் அணிந்து இருசக்கர வாகனத்தில் கம்பீரமாக வலம் வந்த பெண்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.