ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் ஓடும் தாவி ஆற்றின் அருகே அமைக்கப்பட்டு உள்ள தேனீ வளர்ப்பு மையத்தில், பெண் தொழிலாளர் ஒருவர் தேனீப் பெட்டிகளை ஆய்வு செய்தார். இப்பகுதியில் நிலவும் இதமான தட்பவெப்பநிலை மற்றும் பூத்துக் குலுங்கும் மலர்களால் தேன் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.