அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், சென்னை மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது பிரசார வேனின் பக்கவாட்டில் துண்டு கட்டி, அதை பிடித்து தொங்கிக் கொண்டே சென்ற தென் சென்னை, தென் கிழக்கு மாவட்ட செயலர் அசோக் மற்றும் முன்னாள் அமைச்சர் உதயகுமார்.
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் மணல் சிற்பங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டார்.
கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்த தொகுதி வேட்பாளருமான வேலுமணியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி வழங்கப்பட்டது