100% வாக்களிக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காரமடை நகராட்சி சார்பில் அரங்கநாதர் கோவில் முன்பு ரங்கோலி கோலம் இட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்.
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிடாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.