நாகர்கோவிலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொண்டர்கள் சாக்கை கிழித்து அதை குடையாக பயன்படுத்தி வெயில் இருந்து தற்காத்து கொண்டனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜையில் முன்னிட்டு உலகத் திருவள்ளுவர் சங்கத்தினர் திருவள்ளுவர் சிலையிலிருந்து மக்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றது.
கோவை ராம்நகர் விவேகானந்தர் சாலையிலுள்ள டாக்டர் ராஜரத்தினம் மருத்துவமனையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரத்ததான மையத்தை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பார்வையிட்டார்.