நாகர்கோவிலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொண்டர்கள் சாக்கை கிழித்து அதை குடையாக பயன்படுத்தி வெயில் இருந்து தற்காத்து கொண்டனர்.
திமுக-காங் இடையிலான கூட்டணி உடைந்த நிலையிலும் டில்லியில் பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்க சென்ற திமுக எம்பி கனிமொழி, காங் எம்பி ஜோதிமணி இருவரும் பாசத்துடன் கட்டியணைத்துக் கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், மண் ஜாடிகள் அதிக அளவில் விற்பனையாகி வருவதால் அவற்றின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இடம்: காருகுறிச்சி, திருநெல்வேலி.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு வரும் சிலர் தற்கொலை முயற்சிக்கு ஈடுபடுவதால், போலீசார் தீவிர சோதனைக்குப் பிறகு மனு கொடுக்க அனுமதிக்கின்றனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், நியாய விலை கடைகளில் பாக்கெட் முறையை அமல்படுத்திட கோரி உட்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் ஆதரவாளர்கள் 1000 தீர்க்கும் மேற்பட்டோர் தாங்கள் அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதங்களை சென்னையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் வைத்து கோஷம் எழுப்பினர்.