தினமலர் நாளிதழ் கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன் இணைந்து புதுச்சேரி சுகன்யா கன்வர்ஷன் சென்டரில் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் பிரிவு நிகழ்ச்சியில் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா விளக்கம் அளித்தார்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.