கல்பவிருக்ஷா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் சார்பில், பரதநாட்டிய கலைஞர் தீபா சதாசிவத்தின் மாணவியரின் சலங்கை வந்தனம் எனும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி சார்பில் உலக அமைதி காப்போம் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் வெற்றி இலக்கை நோக்கி மாணவர்கள் ஓடினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அடாத மழையிலும் பிளாஸ்டிக் தாள்களை போர்த்திய படி சவாரியை தொடர்ந்த ரிக்ஷா ஓட்டுநர்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இன்று மோத உள்ளன. இதை கொண்டாடும் விதமாக தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் விசித்திரமான வடிவில் கார்களை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்று கால்பந்து வடிவில் வண்ணமயமான காரை வடிவமைத்துள்ளது. அதன் அருகே சிறுவர்கள் உற்சாகமாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.