திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள மேம்பாலத்திற்காக மண் பரிசோதனை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது.இடம் : அக்கரை.
கடலூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலையொட்டி கடலூர் தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு பதிவு செய்யும் இடத்தில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் மீன் பிடி தடைக்கலம் அமலுக்கு வருவதால் தேங்காய்திட்டு மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வலைகளை பத்திரப்படுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் கலை கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். அருகில்எஸ்.பி.,ஜெயக்குமார் ஆகியோர்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான தபால் ஓட்டு பதிவு துவங்கியது. இடம்: லட்சுமி தெரு, கம்பன் நகர், மாதாவரம்.
தமிழக சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எவ்வாறு வாக்குப்பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு வாகனம் மெரினா கடற்கரை பகுதியில் நின்றது இதை ஆர்வத்துடன் கண்டறிந்த புதிய வாக்காளர்கள்.
தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து கங்கைகொண்டான் பகுதியில் பிரச்சாரம் செய்ய தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி வந்தார். லோடு ஆட்டோவில் ஆபத்தான முறையில் அழைத்து வரப்பட்ட பெண்கள்...