சுடும் வெயிலில் ஒரு துளி தண்ணீருக்காக இது போன்ற பறவைகள் பல தவிக்கின்றன. நம் வீடு, அலுவலக மாடிகளில் திறந்த வெளியிடங்களில் சிறு குவளையில் குடிநீர் வைத்து இது போன்ற நம் சக ஜீவன்களை காப்போம். இடம்: கோவை, திருச்சி சாலை.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சிறுவர் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஐஸ் கட்டியில் பதப்படுத்தப்பட்ட பழங்களை உணவாக வழங்கப்படுகிறது. இடம் : கிண்டி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் குடோனில் தயார் நிலையில் உள்ளது.