பஞ்சாபில் நெல் மற்றும் கோதுமைக்கு மாற்றாக குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தும் சூரியகாந்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்குள்ள பட்டியாலாவில் நன்கு விளைந்த சூரிய காந்தி பூக்கள் மஞ்சள் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன.
ஜெகந்நாதர் ரத உத்சவத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின் தக்ஷின் தினாஜ்பூரில் அலங்கரிக்கப்பட்ட படகில் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் சிலைகளை பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர்.