போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் உள்ள புதுச்சேரி- கடலூர் சாலையில், எடையார்பாளையத்தில் சென்டர் மீடியன் கட்டமால் போலீசாரால் இரும்பு பேரல்கள் வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஆட்சியின் இறுதி கட்டத்தில் கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று( ஜூலை 17), அய்யங்குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது.
சிறுமுகையில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டதால் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.