கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள். இடம்: திருவொற்றியூர் குப்பம்.
தென் மாநிலங்களில் மிக முக்கியமானதும் 105 அடி உயரம் கொண்டதுமான ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 59 அடியாக சரிந்துள்ளது. நீர்மட்டம் அதிகமாக இருக்கும்போதெல்லாம் மூழ்கிக் காணப்படும், டணாய்க்கன் கோட்டை தற்போது வெளியே தெரிகிறது.