சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள். இடம்: திருவொற்றியூர் குப்பம்.
மலையும், மலையை சார்ந்த இடமுமான நீலகிரியை கடந்த காலங்களில் சமவெளி பகுதியில் இருந்து பார்த்தால் பச்சை மலையில் ஊதா நிற குறிஞ்சி மலர்கள் மட்டும் தெரியும். தற்போது பல வண்ண கட்டடங்கள் மெல்ல, மெல்ல வெப்ப பூமியாக மாற்றி வருகின்றன.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் கனமழை காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. தசஅஸ்வமேத காட் பகுதியில் மழை வெள்ளத்தில் மூழ்கிய சிவலிங்க கோவிலில் குழந்தையுடன் பிரார்த்தனை செய்த பக்தர்.
மஹாராஹ்டிராவின் மும்பை கொலாபா பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் போது, மும்பைவாசிகள் கடலில் கொட்டிய நெகிழி உள்ளிட்ட கழிவுகளை, கடல் அலைகள் அடித்து வந்து மீண்டும் கரையில் கொட்டியது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஆட்சியின் இறுதி கட்டத்தில் கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று( ஜூலை 17), அய்யங்குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது.
சிறுமுகையில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டதால் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.