கோவை ரேஸ் கோர்ஸ் தாஜ் ஓட்டலில் நடந்த கே.ஜி., மருத்துவமனையின் ரோபாடிக் முறையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தொடக்க விழாவில் மருத்துவமனையின் நிறுவன தலைவர் பக்தவச்சலம் கலந்து கொண்டு பேசினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அடாத மழையிலும் பிளாஸ்டிக் தாள்களை போர்த்திய படி சவாரியை தொடர்ந்த ரிக்ஷா ஓட்டுநர்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இன்று மோத உள்ளன. இதை கொண்டாடும் விதமாக தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் விசித்திரமான வடிவில் கார்களை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்று கால்பந்து வடிவில் வண்ணமயமான காரை வடிவமைத்துள்ளது. அதன் அருகே சிறுவர்கள் உற்சாகமாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.
மலையும், மலையை சார்ந்த இடமுமான நீலகிரியை கடந்த காலங்களில் சமவெளி பகுதியில் இருந்து பார்த்தால் பச்சை மலையில் ஊதா நிற குறிஞ்சி மலர்கள் மட்டும் தெரியும். தற்போது பல வண்ண கட்டடங்கள் மெல்ல, மெல்ல வெப்ப பூமியாக மாற்றி வருகின்றன.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் கனமழை காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. தசஅஸ்வமேத காட் பகுதியில் மழை வெள்ளத்தில் மூழ்கிய சிவலிங்க கோவிலில் குழந்தையுடன் பிரார்த்தனை செய்த பக்தர்.
மஹாராஹ்டிராவின் மும்பை கொலாபா பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் போது, மும்பைவாசிகள் கடலில் கொட்டிய நெகிழி உள்ளிட்ட கழிவுகளை, கடல் அலைகள் அடித்து வந்து மீண்டும் கரையில் கொட்டியது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஆட்சியின் இறுதி கட்டத்தில் கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.