நான்கு குழந்தைகளுக்கு மேல் ஆட்டோவில் ஏற்றிச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்த நிலையில் பள்ளி திறந்த முதல் நாளான நேற்று அளவுக்கு அதிகமாகவும், ஆபத்தான முறையிலும் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ. இடம்: கோவை, போத்தனூர்.
சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் டிஜிட்டல் திறன் பலகைகளை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.
சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் பல்வேறு தலைவர்களின் வேடமணிந்து வந்த மாணவர்களுடன் உரையாடினார்.
மணல் ரோடா..தார் ரோடா... என வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏறபடுத்தும் வகையில் ரோட்டில் குவிந்துள்ள மணல் குவியலால் விபத்து அபாயம் உள்ளது. இடம் : வடமதுரை காணப்பாடி செல்லும் ரோடு.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் புத்தகங்கள் வாங்கிய மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள்.