தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இடம்: கலெக்டர் அலுவலக வளாகம், திருநெல்வேலி.
உலகின் அழிந்து வரும் அரிய பறவை இனமான கிரேட்டர் அட்ஜூடன்ட் ஸ்டார்க்ஸ் எனப்படும் பெரிய வகை நாரைகள் வேறு வழியின்றி குப்பையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கலந்த விஷக் கழிவுகளை உண்ணும் அவலம் ஏற்பட்டுள்ளது. இடம்: குவஹாத்தி, அசாம்.
நான்கு குழந்தைகளுக்கு மேல் ஆட்டோவில் ஏற்றிச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்த நிலையில் பள்ளி திறந்த முதல் நாளான நேற்று அளவுக்கு அதிகமாகவும், ஆபத்தான முறையிலும் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ. இடம்: கோவை, போத்தனூர்.
சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் டிஜிட்டல் திறன் பலகைகளை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.
சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் பல்வேறு தலைவர்களின் வேடமணிந்து வந்த மாணவர்களுடன் உரையாடினார்.