பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இடம்: கலெக்டர் அலுவலக வளாகம், திருநெல்வேலி.
உலகின் அழிந்து வரும் அரிய பறவை இனமான கிரேட்டர் அட்ஜூடன்ட் ஸ்டார்க்ஸ் எனப்படும் பெரிய வகை நாரைகள் வேறு வழியின்றி குப்பையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கலந்த விஷக் கழிவுகளை உண்ணும் அவலம் ஏற்பட்டுள்ளது. இடம்: குவஹாத்தி, அசாம்.
நான்கு குழந்தைகளுக்கு மேல் ஆட்டோவில் ஏற்றிச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்த நிலையில் பள்ளி திறந்த முதல் நாளான நேற்று அளவுக்கு அதிகமாகவும், ஆபத்தான முறையிலும் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ. இடம்: கோவை, போத்தனூர்.