கடந்தாண்டு இதே நாளில் காவிரி நீர் ஆர்ப்பரித்து ஓட கல்லணை கடல் போல காட்சியளித்தது. இந்த ஆண்டு கர்நாடகாவும், பருவமழையும் கைவிட்டதால் வெறும் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. வறண்டு காட்சியளிக்கும் கல்லணை.
சென்னை காலாஷேத்ரா வளாகத்தில் நடந்துவரும் கலா உத்சவம் கைவினைபொருள்கள் கண்காட்சியில் கைவினைப் பொருட்களை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள். இடம் : திருவான்மியூர்
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கூந்தங்குளம் பறவைகள் சரணாலய குளத்தில் நீர் வேகமாக வற்றிவருவதால் வலசை பறவைகள் உணவின்றி தவிக்கின்றன.