உள்ளடக்கத்திற்கு செல்ல 1/
இலைகளற்ற தன் மொட்டைக்கிளைகளை வெள்ளை அரிவாள் மூக்கன் என்ற பறவைகளுக்கு புகலிடமாக்கித் தந்துள்ளது. இந்த பட்டுப்போன மரம். இடம்: வெள்ளலூர் குளம், கோவை. 2/
அந்தி சாயும் பொழுதில் சூரியன் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு பின்னால் மறைவது போல் காட்சியளித்தது கருமேகம். இடம்: திருப்பூர். 3/
ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையில் சிறுகளத்தூர் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் மீன் கழுவுகளை உண்ணும் காகங்கள் 4/
சென்னை காலாஷேத்ரா வளாகத்தில் நடந்துவரும் கலா உத்சவம் கைவினைபொருள்கள் கண்காட்சியில் கைவினைப் பொருட்களை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள். இடம் : திருவான்மியூர் 5/
போக்குவரத்து போலீசார் மெத்தனத்தால், பறிமுதல் வாகனங்கள் மீது செடி-கொடிகள் படர்ந்து, புதர்மண்டி காணப்படுகிறது. இடம்; திருவொற்றியூர். 6/
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாயில் இரை தேடிக்கொண்டிருக்கும் வாத்துக்கள். இடம்: சிறுகளத்தூர் 7/
சென்னையில் நிலவும் கடும் வெயிலால் வெப்பத்தை தாங்காமல் கடற்கரையில் தண்ணீரில் நனைந்து உடல் சூட்டை தணிக்கும் வாயில்லா ஜீவன்கள். இடம் : பெசன்ட் நகர். 8/
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கூந்தங்குளம் பறவைகள் சரணாலய குளத்தில் நீர் வேகமாக வற்றிவருவதால் வலசை பறவைகள் உணவின்றி தவிக்கின்றன. 9/
திருநெல்வேலி மாவட்டம் கடம்பன் குளம் பகுதியில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. 10/
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாக குளியல் போடும் சுற்றுலா பயணிகள்.
மேலும் undefined
மேலும் undefined