கூத்தன்குளம் பறவைகள் சரணாலய குளத்தில் நீர் குறைந்த அளவே உள்ளதால் வலசை வரும் பறவைகள் ஆங்காங்கே உள்ள குளங்களில் இரையை தேடி குவிகின்றன. இடம்: உத்தமபாண்டியன் குளம், திருநெல்வேலி
சென்னை கடற்கரை, தாம்பரம் இடையில் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அலைமோதிய பயணிகள் கூட்டம். இடம் பூங்கா நகர் ரயில்வே.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்துவங்கியுள்ள நிலையில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இடம்: சுந்தரபாண்டியபுரம், தென்காசி.
சென்னை மெரினா கடற்கரையில் நீல கொடி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளிகள், மக்கள் நடந்து செல்வதற்கான பாதையில் தடைகளை மீறி இருசக்கர வாகனத்தில் போலீசார், மக்கள் வலம் வருகின்றனர்.