திருப்பூர் காட்டு வளவு பகுதியில் ரோடு பழுதடைந்து பல மாதங்களாக சரி செய்யப்படுவதால், மா.கம்யூ கட்சி சார்பில் எச்சரிக்கை பலகை நட்டு வைத்து போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் காமராஜர் நகர் பகுதியில், ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் காலி குடத்துடன் அரசு பேருந்தை சிறை பிடித்து, செங்கம் - கிளையூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 4வது தொழில் கண்காட்சி திருமுடிவாக்கத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. தென்னரசு துவக்கி வைத்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவம் ஒன்பதாம் நாள், கோவில் மூன்றாம் பிரகாரம் மகிழ மரம் அருகே சிவகாமி சமேத நடராஜர் பெருமானுக்கு திருஉடல் உற்சவத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு எருகம்பெனி - ரத்தினபுரி வரை சங்கனூர் கால்வாயின் இருபுறமும் மாநகராட்சி சார்பில் தடுப்புசுவர் எழுப்பி வாகன ஓட்டிகள் செல்ல புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.