ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை யொட்டி, சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் உள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் உள்ள லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையம், உலகின் மிக அழகான விமான நிலையங்களில் ஒன்றாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இங்கு புதிதாக கட்டுப்பட்டுள்ள இரண்டாவது முனையத்தின் அழகிய வெளிப்புற தோற்றம்.
திருப்பூர் காட்டு வளவு பகுதியில் ரோடு பழுதடைந்து பல மாதங்களாக சரி செய்யப்படுவதால், மா.கம்யூ கட்சி சார்பில் எச்சரிக்கை பலகை நட்டு வைத்து போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் காமராஜர் நகர் பகுதியில், ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் காலி குடத்துடன் அரசு பேருந்தை சிறை பிடித்து, செங்கம் - கிளையூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 4வது தொழில் கண்காட்சி திருமுடிவாக்கத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. தென்னரசு துவக்கி வைத்தனர்.