தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை யொட்டி, சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் உள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்.
17-Jul-2026

ShareTweetShareShare

2/

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை யொட்டி, சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் உள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
17-Jul-2026

3/

பந்தலூர் குரூஸ் மலை அண்மையில் பெய்த பருவமழையால் பசுமைக்கு மாறியுள்ள காட்சி, மலை மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
17-Jul-2026

4/

வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் உள்ள லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையம், உலகின் மிக அழகான விமான நிலையங்களில் ஒன்றாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இங்கு புதிதாக கட்டுப்பட்டுள்ள இரண்டாவது முனையத்தின் அழகிய வெளிப்புற தோற்றம்.
17-Jul-2026

இன்றைய போட்டோ16-Jul-2026

5/

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த தூளி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் போதிய தண்ணீர் இன்றி, வறண்டு காணப்படுகிறது.
16-Jul-2026

6/

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த தூளி கிராமத்தில், பயிர்களை காப்பாற்ற டேங்கர் லாரி வாயிலாக நிலத்திற்கு நீர் பாய்ச்சும் நிலை.
16-Jul-2026

7/

திருப்பூர் காட்டு வளவு பகுதியில் ரோடு பழுதடைந்து பல மாதங்களாக சரி செய்யப்படுவதால், மா.கம்யூ கட்சி சார்பில் எச்சரிக்கை பலகை நட்டு வைத்து போராட்டம் நடத்தினர்.
16-Jul-2026

8/

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் காமராஜர் நகர் பகுதியில், ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் காலி குடத்துடன் அரசு பேருந்தை சிறை பிடித்து, செங்கம் - கிளையூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
16-Jul-2026

9/

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 4வது தொழில் கண்காட்சி திருமுடிவாக்கத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. தென்னரசு துவக்கி வைத்தனர்.
16-Jul-2026

10/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவம் ஒன்பதாம் நாள், கோவில் மூன்றாம் பிரகாரம் மகிழ மரம் அருகே சிவகாமி சமேத நடராஜர் பெருமானுக்கு திருஉடல் உற்சவத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
16-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us