கோவை சுந்தராபுரம் வி.எஸ்., செங்கோட்டையா நினைவு உயர்நிலைப் பள்ளியில் தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவர்களுடன் பட்டம் இதழ் வழங்கிய போத்தீஸ் நிறுவன துணைத் தலைவர் சத்யநாராயணன். உடன் (இடமிருந்து) பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி, உதவி தலைமை ஆசிரியர் செல்வராணி.
மஹாராஷ்டிராவின் மிக முக்கியமான ஆன்மிக விழாக்களில் ஆடி ஏகாதசியும் ஒன்று. இந்நாளில் விஷ்ணு பகவானை வழிபட பாரம்பரிய உடை அணிந்து தாளங்களை இசைத்தபடி ஊர்வலமாக செல்வது வழக்கம். அப்படி நடந்த ஊர்வலத்தில் பங்கேற்ற குழந்தைகள். இடம்: தாதர், மும்பை.
குஜராத் மாநிலம் சூரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீதி காடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரின் ஒரு பகுதியை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்து அன்னையர் முன்னணி சார்பில், தீர்த்த குட ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. அதில் பங்கேற்ற திரைப்பட நடிகர் ரஞ்சித் , இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம், பொது செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர்.