குஜராத்தில் தாஷாமா விரதம் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்கள் குடும்பத்தின் நல்வாழ்வு வளம் மற்றும் பாதுகாப்புக்காக தாஷாமா தேவியை 10 நாட்கள் விரதம் இருந்து வழிபடுகின்றனர். வரும் 12ல் துவங்கவுள்ள விரதத்துக்காக வண்ணமிகு தாஷாமா சிலைகள் தயாராகின்றன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள நேரு விலங்கியல் பூங்கா நம் நாட்டில் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு தளங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. பூங்காவின் பரந்து விரிந்த இயற்கை சூழல் சிறப்பான பராமரிப்புடன் சேர்ந்து இங்குள்ள சிங்கங்களுக்கான பகுதி சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள வயல்களில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை பார்வையிட கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் பூக்களை பார்த்து ரசிப்பதுடன் அதற்கிடையே நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
தொடர் கனமழை காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பல படித்துறைகள் நீரில் மூழ்கி வருகின்றன. தசஸ்வமேத் படித்துறையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மக்கள் புனித நீராடினர்.
குன்னூரில் நிலவும் இதமான காலநிலையில் மலை பாதையில் இருந்து காணப்படும் சமவெளி பகுதிகள் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
திருவொற்றியூர் சுங்கச்சாவடி- எண்ணூர் விரைவு சாலை சந்திப்பு அருகே பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால் செடி, கொடிகள் படர்ந்தும் மண்ணோடு மண்ணாக புதைந்தும் வீணாகி வருகின்றன.