ஆடி அமாவாசையையொட்டி பாபநாசம் உலகம்மன்-பாபநாச சுவாமி கோவில் முன்புள்ள, தாமிரபரணி ஆற்றில் திரண்ட பக்தர்கள் முன்னோர்களை நினைத்து புனித நீராடி, வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் யோகா பயிற்சி மையம் சார்பில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியின் மூவர்ண உடையில் யோகா செய்து அசத்திய மாணவியர்.
சுதந்திர தினத்தையொட்டி மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதிகளில் பலர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர்.
ஒடிஷா மாநிலத்தில் கனமழை கொட்டுகிறது. ஜாஜ்பூர் மாவட்டம் தசரத்பூரில் பைதரணி ஆற்றின் துணை நதியான கனி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இப்போதே விழா களைகட்டியுள்ளது. மும்பை பரேலில் விநாயகர் சிலை ஒன்றை பந்தலுக்கு எடுத்துச் சென்றபோது அந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பாறைக்குழிகளில் கொட்டப்பட்ட குப்பை மற்றும் தேங்கியுள்ள நச்சுநீரை அகற்ற கோரி காதில் பூ வைத்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
தினமலர் கார்னிவல் அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டம் போரூர் ஓசியன் க்ளோரோபில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. இதில் மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்