தினமலர் நாளிதழ், சத்யா ஏஜென்சி சார்பில், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ, கோவை கொடிசியா அரங்கில் இன்று (ஆகஸ்ட் 14) துவங்கியது. கலெக்டர் பவன் குமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அருகில் (இடமிருந்து) இஎல்ஜிஐ மார்க்கெட்டிங் துறை தலைவர் பார்த்தசாரதி, இல்ஜிஐ மேனேஜிங் டைரக்டர் பாலகிருஷ்ணன், பி.ஆர்.ஓ., செந்தில் அண்ணா, சத்யா ஏஜென்சிஸ் மண்டல சேர்மன் ஆபிரகாம், சுஜாதா ஹோம் அப்ளையன்ஸ் சேர்மன் உதயத்துல்லா.
சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களால் ஜி. எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் இடம் பெருங்களத்தூர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் பத்தாவது நாளில், கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை குளத்தில், பராசக்தி அம்மனுக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் நிறைவு நாளில், கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள வளைய காப்பு மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மன்.