திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் நிறைவு நாளில், வளைய காப்பு மண்டபத்தில் அம்மனுக்கு நடந்த வளைய காப்பு நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் வழிபட்டனர்.
முதல்வர் விஜயை தலைமை செயலகத்தில் தினமலர் இயக்குனர் ஸ்ரீனிவாசன் ராமசுப்பு, மதுரை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ராமசுப்பு, கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், இயக்குனர் லட்சுமிபதி ராமசுப்பு, தினமலர் சென்னை பதிப்பு இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
தினமலர் நாளிதழ், சத்யா ஏஜென்சி சார்பில், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ, கோவை கொடிசியா அரங்கில் இன்று (ஆகஸ்ட் 14) துவங்கியது. கலெக்டர் பவன் குமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அருகில் (இடமிருந்து) இஎல்ஜிஐ மார்க்கெட்டிங் துறை தலைவர் பார்த்தசாரதி, இல்ஜிஐ மேனேஜிங் டைரக்டர் பாலகிருஷ்ணன், பி.ஆர்.ஓ., செந்தில் அண்ணா, சத்யா ஏஜென்சிஸ் மண்டல சேர்மன் ஆபிரகாம், சுஜாதா ஹோம் அப்ளையன்ஸ் சேர்மன் உதயத்துல்லா.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆண்டாள் கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது. திருத்தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்க மன்னார்.
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஒத்திகையின் போது கன்னம் மற்றும் நெற்றியில் தேசியக் கொடியை வரைந்து கையில் அலங்கார தட்டுடன் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர். இடம்: எஸ்.டி.ஏ.டி., மைதானம், திருப்பூர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜோத்வாரா பகுதியில் மழை காரணமாக சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளன. இவை பார்ப்பதற்கு நிலவின் மேற்பரப்பு போல இருப்பதாகக் கூறி விண்வெளி வீரர் உடை அணிந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.