சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் மாணவியர் தங்கள் முகங்களில் மூவர்ண கொடியின் வண்ணங்களை வரைந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஐந்தாம் ஆண்டு காற்றாடி திருவிழா துவங்கியது. நாளை மறுநாள் வரை நடக்கும் இதில் நம் நாட்டு காற்றாடிகள் மட்டுமின்றி வெளிநாட்டு காற்றாடிகள் என 100க்கும் மேற்பட்ட காற்றாடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
தினமலர் நிர்வாகத்தினர் நேற்று முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். இடமிருந்து தினமலர் இணை இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன், வெளியீட்டாளர் முனைவர் எல்.ராமசுப்பு, கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி, சென்னை பதிப்பு இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி.
சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களால் ஜி. எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் இடம் பெருங்களத்தூர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் பத்தாவது நாளில், கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை குளத்தில், பராசக்தி அம்மனுக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் நிறைவு நாளில், கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள வளைய காப்பு மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மன்.