புலம் அமைப்பு மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்திய ஆதி இசை மற்றும் மரபு போர்க்கலை கருவிகளின் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பழங்கால பொருட்களை பார்வையிட்ட மாணவ-மாணவியர். இடம்: விக்டோரியா அரங்கம், சென்னை.
சகோதரத்துவத்தை போற்றும் வகையில் நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் வரும் 28ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குஜராத் மாநிலம் சூரத்தில் தன்னார்வ அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தங்களின் சகோதரராக கருதி ராக்கி கயிறு கட்டிய பெண்கள்.
தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தர பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது; கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உன்னாவ் பகுதியில் கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கேரளாவில் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் ஓணம் பண்டிகை துவங்கியது; இதையொட்டி கேரளாவின் கொச்சியில் நடந்த ஓணம் பண்டிகையின் துவக்க விழாவில் பாரம்பரிய உடை அலங்காரங்களுடன் பங்கேற்ற கலைஞர்கள்.
சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலில் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.