குன்னூர் ரேலியா அணை வறண்டு சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் வரும் நாட்களில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ள காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தென் இந்திய புரோகிதர்கள் சங்கத்தினர், பிக் ஷாவந்தனம் செய்து மரியாதை சமர்ப்பித்தனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அருகில் துறை அமைச்சர் ரமேஷ், தலைமை செயலாளர் சாய்குமார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ராம்பாக் ரயில் நிலையத்தின் தண்டவாளங்கள் முழுமையாக நீரில் மூழ்கின. இதன் காரணமாக, இவ்வழியே செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பருவமழை பெய்வதை தொடர்ந்து பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது; அங்குள்ள ஜார்ஜ் டவுன் போலீஸ் ஸ்டேஷனை சுற்றி தேங்கிய நீரைக் கடந்து பணிக்கு செல்லும் போலீஸ்காரர்.