காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் உள்ள டெம்பிள் சிட்டி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய கார் மற்றும் பசு மாட்டை தீயணைப்புப்படை வீரர்கள் போராடி மீட்டனர்.
உபியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பிரயாக்ராஜ் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அப்பகுதியில் வீடின்றி தெருவோரும் வசிக்கும் மக்கள், பிளாஸ்டிக் தாள்கள், தார்பாய்கள் போன்ற தற்காலிகப் பொருட்களைக் கொண்டு மழையில் இருந்து பாதுகாத்துக் கொண்டனர்.
சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை வரும் 28 ல் கொண்டாடப்பட உள்ளது. அன்று பெண்கள், தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கிகயிறு கட்டி அன்பை பகிர்ந்து கொள்வர். இதையொட்டி சென்னை சவுகார்பேட்டையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ராக்கி கயிறுகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட பெண்.
ஓணம் பண்டிகைக்கு கேரளாவுக்கு அனுப்புவதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டு உள்ள நேந்திரம் வாழை அறுவடை பணிகள் தீவரம் அடைந்துள்ளன.
குன்னூர் ரேலியா அணை வறண்டு சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் வரும் நாட்களில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ள காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தென் இந்திய புரோகிதர்கள் சங்கத்தினர், பிக் ஷாவந்தனம் செய்து மரியாதை சமர்ப்பித்தனர்.