திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில், ஈஸ்வரமூர்த்தி பூங்கா சுற்று சுவரில், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் பணி நடந்து வருகிறது.
ஆகாயத்தாமரையே ஆக்கிரமித்திருக்கும் குட்டையை தூர்வாரி மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை.காரமடை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குட்டை.
திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், நாற்று நடுவதற்காக போடப்பட்டுள்ள நெல் நாற்றுகள் தண்ணீர் இன்றி கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.இடம்: வெள்ளக்கோவில்,
விருத்தாசலம் அடுத்த காந்தி நகரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து கார் மற்றும் 30 சவரன் நகைகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றதை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சோதனை செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை பூண்டி நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் வீ த லீடர் அமைப்பு சார்பில் மனு கொடுத்தனர்.