சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனும் பள்ளி கல்வித்துறை இயக்கக வளாக கழிப்பறை பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதால் கல்வி சார்ந்த கோரிக்கைகளுக்காக வருவோர் சிரமப்படுவதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கழிப்பறை வளாகம் சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்திற்கு திரண்ட மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் தரையிலேயே அமர்ந்து காத்துக் கிடந்தனர்
கடலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதை கண்டித்து விருத்தாசலம் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.