கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாளை மறுநாள்( செப்.,04) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற போட்டியில் கிருஷ்ணர் வேடமணிந்து பங்கேற்ற குழந்தைகள்.
ஊட்டி மற்றும் பிற சுற்றுலா மையங்களுக்கு செல்ல மலை ரயில் மற்றும் பிற வாகனங்களில் ஆண்டுதோறும் 35 லட்சம் சுற்றுலாபயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மனதை இதமாகும் இத்தகைய ஆத்மார்தமான பயணங்களுக்கு முடிவேது.
உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வாரணாசியில் உள்ள கங்கை நதி 230 அடி என்ற எச்சரிக்கை அளவை தாண்டி 231 அடியை எட்டி உள்ளது. இதனால், துணை நதிகளின் கரையோரப் பகுதிகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உபியின் கான்பூரில் உள்ள பாண்டு நதி கரைபுரண்டு ஓடியதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஆதாரம் ஆராய்ச்சி மற்றும் நலவாழ்வு நிறுவனம் சார்பில் சுப்பு - 75 விருது வழங்கும் விழா சென்னை ஆர் கே கான்வென்ஷன் சென்டரில் நடந்தது. இதில் வழக்கறிஞர் ஜெகந்நாத்திற்க்கு சுப்பு - 75 விருதை வழங்கிய தினமலர் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி. உடன், இடமிருந்து ஆதாரம் அறக்கட்டளை செயலர் ஹேமா கோபாலன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன், சமய சொற்பொழிவாளர் மதுசூதனன், ஆதாரம் அறக்கட்டளை நிறுவனர் திராவிட மாயை சுப்பு, பொருளாளர் மீனாட்சி ஸ்ரீதர், தமிழலை ஆன்மீகம் நிறுவனர் வெங்கடசுப்ரமணியன். இடம்: மயிலாப்பூர்
சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தனது பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக வந்து சென்ற முதல்வர் விஜயை ஆர்வமுடன் மொபைல் போனில் புகைப்படம் பிடிக்கும் மக்கள்.