உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வாரணாசியில் உள்ள கங்கை நதி 230 அடி என்ற எச்சரிக்கை அளவை தாண்டி 231 அடியை எட்டி உள்ளது. இதனால், துணை நதிகளின் கரையோரப் பகுதிகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உபியின் கான்பூரில் உள்ள பாண்டு நதி கரைபுரண்டு ஓடியதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்திற்கு திரண்ட மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் தரையிலேயே அமர்ந்து காத்துக் கிடந்தனர்
கடலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதை கண்டித்து விருத்தாசலம் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.